Connect with us

இலங்கை

முகச் சவரம் செய்யவில்லை; முல்லைத்தீவு உணவகத்திற்கு சீல்

Published

on

Loading

முகச் சவரம் செய்யவில்லை; முல்லைத்தீவு உணவகத்திற்கு சீல்

  முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டு , உரிமையாளருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுசுகாதார பரிசோதகர்களினால் விசுவமடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதன் போது, உணவக பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமை, உணவக அனுமதிப் பத்திரம் இன்மை, தொழிலாளர்கள் முகச் சவரம் செய்யாமை, தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதழ் இன்மை, கழிவு தொட்டி இல்லாமை, வெற்றிலை மென்றவாறு உணவு கையாண்டமை போன்றவை கண்டறியப்பட்டு , உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் போது , உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் , உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் , 50 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன