Connect with us

பொழுதுபோக்கு

மீண்டும் கல்யாண மாப்பிள்ளை ஆன தனுஷ்; மகிழ்ச்சி வெள்ளத்தில் நெப்போலியன்: லேட்டஸ்ட் வீடியோ!

Published

on

Screenshot 2025-11-09 185151

Loading

மீண்டும் கல்யாண மாப்பிள்ளை ஆன தனுஷ்; மகிழ்ச்சி வெள்ளத்தில் நெப்போலியன்: லேட்டஸ்ட் வீடியோ!

அமெரிக்காவின் நேஷ்வில்லில் வாழும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்கிய ஒரு இனிய நிகழ்வாக தனுஷ் – அக்ஷயா தம்பதிகளின் முதலாம் ஆண்டு திருமண நாள் விழா நேற்று (நவம்பர் 7, 2025) மாலை சிறப்பாக நடைபெற்றது.நேஷ்வில்லில் வசிக்கும் சமூக நல ஆர்வலரும், தமிழ் கலாச்சார விரும்பியுமான திரு. நெப்போலியன் துரைசாமி அவர்கள் தமது இல்லத்தில் இந்த விழாவை மிகுந்த அன்போடும், எளிமையோடும், இனிமையோடும் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் நேஷ்வில்லில் வாழும் பல தமிழ் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.டோக்கியோவில் தொடங்கி நேஷ்வில்லில் மலர்ந்த காதல்கடந்த ஆண்டு நவம்பர் 7, 2024, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிகளின் திருமணம் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பல தமிழ் சமூகத்தினரின் அன்பும் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றது. திருமணத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு நேஷ்வில்லில் நடைபெற்ற இந்நிகழ்வு அன்பும் பாசமும் நிரம்பிய ஒரு குடும்ப சந்திப்பாக அமைந்தது.மகிழ்ச்சியோடும், இனிமையோடும் நடந்த விழாநிகழ்ச்சியில் அழகான மலர் அலங்காரம், இனிய இசை, சிறிய கேக் கட் விழா, இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி விருந்தோம்பல் ஆகியவை இடம்பெற்றன. அனைவரும் தம்பதிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இனிய நினைவுகளைப் பதிவு செய்தனர்.சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் மழைதிருமண வாழ்க்கையின் முதல் ஆண்டு நிறைவை கொண்டாடிய தனுஷ் – அக்ஷயா தம்பதிகளுக்கு உலகம் முழுவதும் வாழும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.நெப்போலியன் துரைசாமி அவர்களின் நன்றி பதிவுநிகழ்ச்சிக்குப் பின் சமூக ஊடகங்களில் நெப்போலியன் துரைசாமி அவர்கள்,“உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்! கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த திருமணத்திலிருந்து இன்றுவரை உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் எங்களுடன் உள்ளது. நேஷ்வில்லில் நேற்று நடைபெற்ற இந்த விழா, அன்பின் நிறைவு தான்!”எனக் குறிப்பிட்டு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்தார்.A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)அன்பு, உறவு, ஒற்றுமை, குடும்ப பாசம் ஆகியவற்றின் சங்கமமாக இருந்த இந்த விழா, நேஷ்வில்லில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு மறக்க முடியாத ஒரு இனிய நினைவாக அமைந்தது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன