இலங்கை
அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மக்களுக்குப் பயன் தருவதாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய உற்பத்திகளை அதிகரித்து மக்களுக்கு நிவாரணமளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதற்கமைய, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார முகாமைத்துவத்துவதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்கள் மீளச் செலுத்தப்படும் என்றும் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
