இந்தியா
இந்தியா- சீனா இடையே இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை!
இந்தியா- சீனா இடையே இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை!
இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை கடந்த 05 ஆண்டுகளுக்குப் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் நேரில் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது.
இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பமாகும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. அதற்கமைய, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் ஆரம்பமான நிலையில், இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாங்காய்-டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று முதல் தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
