இலங்கை
எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தத்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
