உலகம்
4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களைச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த ஹமாஸ்!

4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களைச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த ஹமாஸ்!
ஹமாஸ் அமைப்பு 4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை முடிவடையவுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் இறுதி பரிமாற்றம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸினால் ஒப்படைக்கப்பட்ட 4 உடல்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எவ்வாறாயினும். அவர்கள் அனைவரும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல்களின்போது கடத்தப்பட்டவர்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், இஸ்ரேல் வார இறுதியில் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவிருந்த போதிலும் சில காரணங்களால் அதனைத் தாமதப்படுத்தியிருந்தது.