Connect with us

இந்தியா

அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

Published

on

Loading

அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருவுக்கு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Advertisement

விமான இயந்திர கோளாறை கண்டறிந்த விமானி எடுத்த துரித நடவடிக்கையால், ஏற்படவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டு 160 பயணிகளின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக பாதுகாப்பாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமீபகாலமாக விமானத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன