சினிமா
மறுமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த நாக சைதன்யா.. வைரலாகும் பதிவு..!

மறுமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த நாக சைதன்யா.. வைரலாகும் பதிவு..!
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடுகள் காரணமான விவாகரத்து பெற்றனர்.
தற்போது நாக சைதன்யா பாலிவுட் பிரபலம் சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் கோலாகலமாக நடைபெற்றது. இன்னும் அதுகுறித்த எந்த புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியில் வரவில்லை.
Wedding vibes at Annapurana studios #NagaChaitanya #SobhitaDhulipala pic.twitter.com/STGVyVsWIk
இந்நிலையில் நாக சைதன்ய தன் மனைவி சோபிதா குறித்து முதன் முறையாக பேசியுள்ளார். அதில் “ சோபிதா என்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து புதிய வாழ்க்கையை நான் தொடங்கப்போகிறேன். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு அற்புதமான பயணமாக இருக்கும். ஹைதராபாத் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் எங்கள் திருமணம் நடக்கவிருக்கிறது “ என்று கூறியுள்ளார்.