இலங்கை
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுக; சஜித் வலியுறுத்து!
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுக; சஜித் வலியுறுத்து!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியான விசாரணையை கோருகின்றனர். எனினும், நிலைமை தற்போது பாரதூரமாகியுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடந்துவரும் கலந்துரையாடலில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை தொழில்நுட்பம் மூலம் இணைந்துக்கொண்டு, இலங்கையில் நடந்துவரும் விசாரணைகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற விடயங்கள் நாட்டுக்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
