Connect with us

இலங்கை

கோழி லொறி காட்டு யானை மீது மோதி விபத்து

Published

on

Loading

கோழி லொறி காட்டு யானை மீது மோதி விபத்து

  கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை – பக்கமுன பிரதான வீதியில் ரிதிஎல்ல வனப்பகுதியில் இன்று  (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

காட்டு யானை ஒன்று வீதியின் நடுவில் இருந்துள்ள நிலையில், சாரதியழனட கட்டுப்பாட்டை இழந்த லொறி யானை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த விபத்தின் போது லொறியில் இருந்த கோழிகள் பல உயிரிழந்துள்ள நிலையில் வீதியில் சிதறுண்டு இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

Advertisement

விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன