Connect with us

இலங்கை

யாழில் இருந்து சென்ற ரயில் மோதி உயிரிழப்பு

Published

on

Loading

யாழில் இருந்து சென்ற ரயில் மோதி உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (26) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன