இலங்கை
சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்மீது மோதிய பேருந்து – பெண் பலி!
சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்மீது மோதிய பேருந்து – பெண் பலி!
காலி-கொழும்பு பிரதான சாலையில் ரத்கம சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண், காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பூஸ்ஸவைச் சேர்ந்த 77 வயதுடையவர்.
சடலம் காலி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
