இலங்கை
யானையுடன் மோதிய கார் ; தெய்வாதீனமாக தப்பிய தமிழ் குடும்பம்
யானையுடன் மோதிய கார் ; தெய்வாதீனமாக தப்பிய தமிழ் குடும்பம்
காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி நேற்று (27) இரவு 7 விபத்துக்குள்ளானது.
இதன் போது பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊறணி காட்டுப்பகுதியில் யானையுடன் மோதுண்டு குறித்த கார் பலத்த சேதமடைந்ததுடன் அதில் பயணித்த குடும்பம் தெய்வாதீனமாக காயங்கள் ஏதுமின்றி தப்பியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதிகளில் பிரதான வீதியில் இரவு மற்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
