Connect with us

இலங்கை

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவே ஆட்சி அமைக்கும்; முன்னாள் அமைச்சர் நம்பிக்கை!

Published

on

Loading

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவே ஆட்சி அமைக்கும்; முன்னாள் அமைச்சர் நம்பிக்கை!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சம் அறியாத தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவரைப் போலவே நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றில் துணிவுடன் அரசியல் சமரில் ஈடுபடுகின்றார். நாமலின் துணிவுக்கு அஞ்சியே ஆளுங்கட்சியினர் அவரைக் குறி வைத்துள்ளனர். போலிக்குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். எமது பயணம் தொடரும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி மக்கள் சக்தியால் வலுப்படுத்தப்படும். அடுத்த தேசியமட்டத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஆட்சி மலரும். எமது கட்சியில் இருந்தே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுசெய்யப்படுவர்- என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன