இலங்கை
3 ட்ரில்லியன் ரூபா கடன் பெறத்திட்டம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
3 ட்ரில்லியன் ரூபா கடன் பெறத்திட்டம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
இலங்கைக்கு அடுத்த வருடம் 3 ட்ரில்லியன் ரூபா கடனைப்பெற எதிர்பார்த்துள்ளோம். அதற்கான ஒதுக்கீட்டுச் சட்டவரைவு சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அங்கு வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலோ அல்லது வெளிநாட் டிலோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை. அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றத்துக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
