Connect with us

இலங்கை

முகமாலை வடக்கில் 31 குண்டுகள் மீட்பு!

Published

on

Loading

முகமாலை வடக்கில் 31 குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி – பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்குப் பகுதியில் நேற்று 31 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
முகமாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர், தனது வீட்டில் கிடங்கொன்றை வெட்டியுள்ளார். இதன் போது, அதற்குள் இருந்து ஆபத்தான வெடிபொருள்கள் வெளிப்பட்டுள்ளன. இது தொடர்பில் பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன