Connect with us

இலங்கை

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

Published

on

Loading

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

 பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வெலிமடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 59 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நிலையில்,
மாணவியின் தாயும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என கூறப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 02ஆம் திகதி பொலிஸ் முச்சக்கரவண்டியில் தியத்தலாவை பிரதேசத்துக்குச் சென்று, பாடசாலை மாணவியை அங்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன