இலங்கை
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் விவசாயி பலி!
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் விவசாயி பலி!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயின் மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம் நேற்று 14ஆம் திகதி பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஏரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விவசாயி நேற்று பிற்பகல் 11.00 மணிக்கு வயில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வீதியில் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
