Connect with us

சினிமா

12 வருடமாக படமில்லை..நடிப்பை நிறுத்தி வழக்கறிஞரான ஸ்ரேயா சர்மா!! ரீஎண்ட்ரி கொடுத்துட்டாங்க..

Published

on

Loading

12 வருடமாக படமில்லை..நடிப்பை நிறுத்தி வழக்கறிஞரான ஸ்ரேயா சர்மா!! ரீஎண்ட்ரி கொடுத்துட்டாங்க..

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடைய 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார்.அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார். நடிப்பை ஒதுக்கிவிட்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஸ்ரேயா, நவம்பர் 22 ஆம் தேதி ரிலீஸான நாம் என்ற அஜய் தேவ்கன் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.சமீபத்தில் கூலிங் கிளாஸ் போட்டு மாஸ் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன