Connect with us

இலங்கை

மாவீரர் வார நிகழ்வு; யாழில் பலரிடம் தொடரும் விசாரணை!

Published

on

Loading

மாவீரர் வார நிகழ்வு; யாழில் பலரிடம் தொடரும் விசாரணை!

  யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

அது தொடர்பில் நேற்று (06) இரு இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

மாவீரர் நாள் குறித்து முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை (4) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

அதேவேளை, வல்வெட்டித்துறை பகுதியில் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடியமை தொடர்பில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 06 பேரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

Advertisement

மேலும் மாவீரர் நாள் மற்றும் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, முகநூலில் பதிவிட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 06க்கு மேற்பட்ட இளைஞர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன