இலங்கை
துப்பாக்கிச்சூடு உள்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது!
துப்பாக்கிச்சூடு உள்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது!
துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவால்,ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, நேற்று (20) பிற்பகல் மக்காவிட்ட மற்றும் தம்மிடாவில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு சந்தேக நபரிடம் 26.510 கிராம் படிக மெத்தம்பேட்டமைனும், மற்றொரு நபரிடம் 19 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்கள் மக்காவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
