Connect with us

இலங்கை

மாகாணத் தேர்தலில் முடிவு அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை

Published

on

Loading

மாகாணத் தேர்தலில் முடிவு அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும்  மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் திருத்தப்படும் வரை மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது. 

அவ்வாறு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டம் திருத்தப்பட்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அது தொடர்பான அதிகாரம் கிடைத்தவுடன் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே தடவையில் தேர்தல்களை நடத்துவதா, இல்லையா? கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்துவதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

Advertisement

மாகாணசபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்துவதாயின் தேர்தல்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன