இலங்கை
யாழில் பிறந்து 25 நாளேயான சிசு உயிரிழப்பு
யாழில் பிறந்து 25 நாளேயான சிசு உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில், மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இநிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று (21) சிசு உயிரிழந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
