Connect with us

இலங்கை

விடுதி வசதியின்றி சிரமத்துக்குள்ளாகும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்! 

Published

on

Loading

விடுதி வசதியின்றி சிரமத்துக்குள்ளாகும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்! 

இலங்கை – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள விடுதி தொடர்பான சிக்கலைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், விடுதி வசதியின்மையால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு இன்று முதல் நிகழ்நிலையில் வகுப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரம் தங்களின் வீடுகளிலிருந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதி பிரச்சினை காரணமாக சுமார் 125 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஒரு நாள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இந்தச் சிக்கலை முன்னிறுத்தி, விடுதி வசதி கிடைக்காத மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புக்களை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத்   தெரிவிக்கப்படுகின்றது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன