இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – மைத்திரியின் மனு ஒத்திவைப்பு!
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – மைத்திரியின் மனு ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாதிரியார் சிரில் காமினி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
விசாரணை இன்று (27) முடிவடைந்த பின்னர், தீர்ப்பை அறிவிப்பதை அமர்வு ஒத்திவைத்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
