Connect with us

இலங்கை

சதொச ஊடாக விற்கப்படும் தேய்காய்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Published

on

Loading

சதொச ஊடாக விற்கப்படும் தேய்காய்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்கப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளையதினம் (09-12-2024) முதல் 2 இலட்சமாக அதிகரிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

ஒரு தேங்காய் 130 ரூபாய்க்கு விற்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன