இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்; உறுதிமொழியை நிறைவேற்றுக; எதிர்க்கட்சி வலியுறுத்து!
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்; உறுதிமொழியை நிறைவேற்றுக; எதிர்க்கட்சி வலியுறுத்து!
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீன சேனசிங்க தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும். கடந்தகாலங்களில் அரசியல் பழிவாங்கலுக்கே இந்த ஏற்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
