Connect with us

இலங்கை

யாழில் இருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை! வெளியான அறிவிப்பு

Published

on

Loading

யாழில் இருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை! வெளியான அறிவிப்பு

யாழில் இருந்து கொழும்பு வரையில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவையானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலான காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இந்த சேவையை வழங்கி வந்த கடுகதி ரயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக டிசம்பர் 30 ஆம் திகதி வரை தனது சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.

Advertisement

இதன்படி, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5. 30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட ரயிலானது முற்பகல் 11: 15 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து மதியம் 12. 34 இற்கு பயணத்தை ஆரம்பித்து இரவு 7.20 இற்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன