இலங்கை
லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் கைது!
லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் கைது!
திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணை குழுவினால் இன்று 31ஆம் திகதி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
