இலங்கை
மருதானையில் இரு வீடுகளில் தீ ; பல பொருட்கள் நாசம்
மருதானையில் இரு வீடுகளில் தீ ; பல பொருட்கள் நாசம்
கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவல் இன்று (01) அதிகாலை 05.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பரவலின் போது இரு வீடுகளிலும் உள்ள பல பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தீ பரவலுக்கான காரணம்ட இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
