Connect with us

இலங்கை

சீதை அம்மன் ஆலயத்தில் திருடர்களின் அடாவடிச்செயல்!

Published

on

Loading

சீதை அம்மன் ஆலயத்தில் திருடர்களின் அடாவடிச்செயல்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்தின்  6 உண்டியல்கள் நேற்றிரவு  உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில், நுவரெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய  நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள்  6உண்டியலை உடைத்து அதிலிருந்த  பணத்தைத்  திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

Advertisement

ஆலயத்தில் உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தில் பிரதான காரியாலயத்திலிருந்த சி.சி.டி.வி. கெமராவின் முழு இணைப்பையும் துண்டித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த  சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளைப் பதிவு  செய்துள்ளனர். மேலும் ஆலயத்தின் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கெமராக்களை அடிப்படையாக கொண்டு  தற்போது  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன