Connect with us

இலங்கை

வவுனியா வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது!

Published

on

Loading

வவுனியா வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது!

வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை குடும்பஸ்தர் 46வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனத்தின் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம் மற்றும் வேலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன