Connect with us

இந்தியா

பக்தி பாரம்பரியம்: ராமர் திருக்கல்யாணத்திற்காக நெல் பயிரிடும் ஆந்திர கிராமம்..!!

Published

on

ராமர் கல்யாணம்.

Loading

பக்தி பாரம்பரியம்: ராமர் திருக்கல்யாணத்திற்காக நெல் பயிரிடும் ஆந்திர கிராமம்..!!

ராமர் கல்யாணம்.

Advertisement

நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தனித்துவமான மத சடங்கு முறை கால காலமாக நடைபெற்று வருகிறது. அவற்றை பற்றி கேட்டால் நமக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாமலும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மத சடங்கு ஆந்திர மாநிலத்தில் நடந்து வருகிறது அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆந்திர மாநிலம், கோகாவரம் மாவட்டத்தில் உள்ள அவுச்சாதபுரம் என்ற விசித்திரமான கிராமத்தில், 14 ஆண்டுகளாக ஒரு தனித்துவமான பக்தி பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு ஏக்கர் வயலில் நெல் பயிரிடுகிறார்கள், பின்னர் அதை அறுவடை செய்து பத்ராசலம் கோவிலுக்கு ராமுலவாரி கல்யாணம் என்று அழைக்கப்படும் ராமர் மற்றும் சீதா தேவியின் புனித திருமண விழாவிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த தனித்துவமான பாரம்பரியத்தை கிராமத்தில் உள்ள ஆன்மீகக் குழுவான ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா என்ற சங்கம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்கள் இந்த நெல் அறுவடையை ஒரு புனிதமான சடங்காக மாற்றுகின்றனர். அந்த சடங்கில் ஆன்மீக உறுப்பினர்கள் ராமர், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், கருடன் மற்றும் சுக்ரீவன் போன்ற தேவர்கள் போல உடை அணிந்து கொள்வார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து கொண்டு, ராமர் பற்றிய பஜனை மற்றும் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டே நெல்லை அறுவடை செய்கின்றனர். இந்த நிகழ்வை ஆன்மீக நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் நெல் அறுவடை செய்யும் இடத்திற்கு எதிரில் ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன் இருக்கும் சன்னதியும் அமைந்துள்ளது. அவர்கள் நெல் அறுவடை செய்வதற்கு முன், ராமருக்கு பூஜை செய்து விட்டு தான், அறுவடையை செய்வார்கள்.

Advertisement

அறுவடை செய்யப்பட்ட நெல் பின்னர் தானியமாக மாற்றப்படுகிறது, மேலும் ஒவ்வொரு தானியத்தையும் கவனமாக தோலுரித்து, நெல் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, பத்ராசலம் கோயிலுக்கு அனுப்பப்படும் ஒரு கோடி நெல் பயிர்களை உருவாக்க கிராம மக்கள் இலக்கு வைத்துள்ளனர். இந்த தன்னலமற்ற செயல் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் ராமரின் ஆசீர்வாதம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெற்றி அடைய செய்யும் என்று பலர் நம்புகிறார்கள்.

இந்த பாரம்பரியத்திற்காக கிராமவாசிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள பாராட்டி வருகின்றனர். இந்த தனித்துவமான பக்தி நடைமுறையானது கிராமவாசிகளின் பக்தியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது. அவுச்சாதபுரம் கிராமவாசிகள் இந்த தனித்துவமான பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன