Connect with us

இலங்கை

பிக்குனியை ஆபாசமாக பேசிய இருவர் கைது!

Published

on

Loading

பிக்குனியை ஆபாசமாக பேசிய இருவர் கைது!

பிக்குணி ஒருவரை ஆபாசமாக பேசி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த  சம்பவம் நேற்று இரவு வத்தளை பொலிஸ் நிலையத்தின் கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகே  இடம்பெற்றுள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள் பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் பிக்குணி ஒருவரை மிரட்டியுள்ளனர்.பிக்குணியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

Advertisement

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன