இலங்கை
கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : நபர் ஒருவர் பலி!

கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : நபர் ஒருவர் பலி!
கம்பஹா, தம்மிட்ட, கௌடங்கஹா சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.