Connect with us

இலங்கை

யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!

Published

on

Loading

யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!

கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த  46வயதுடைய  யோகராஜா மயூரதி  என்ற தாயே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

யாழ். போதனா மருத்துவமனையில்  கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில்  மூன்று பிள்ளைகளை பெற்ற  நிலையில்  அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02மணியளவில்   சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
அவரது  மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக  மருத்துவமனையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருமணம் செய்து   20 ஆண்டுகளாக குழந்தை இன்றி  பெரும் துன்பங்களை  எதிர்கொண்ட தாய்,  தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன