இலங்கை
வெளிநாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
வெளிநாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
மலேசியா – கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் இலங்கையர் ஒருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் குறித்துக் நேற்று முன்தினம் (6) காலை 8.40 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 26 வயதுடைய ஊழியர் என்பது தெரியவந்தது.
9வது மாடியில் இருந்து விழுந்த அவர், இரண்டாவது மாடியில் உள்ள நீச்சல்குளத்தின் அருகே சடலமாக கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
