Connect with us

வணிகம்

ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

Published

on

rbi sanjay malhotra

Loading

ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா திங்களன்று இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராக நியமிக்கப்பட்டார்.ஆங்கிலத்தில் படிக்க: Sanjay Malhotra appointed new RBI Governor as Shaktikanta Das’ term endsசஞ்சய் மல்ஹோத்ரா தற்போது நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.மின்ட் ரோட்டில் உள்ள ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு நிதியமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய சக்திகாந்த தாஸிடமிருந்து சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்பார்.புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் அதிக பணவீக்க எண்களுடன் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் கடந்த ஏழு காலாண்டுகளில் குறைந்த வேகத்தில் வளர்ந்தது.வெள்ளியன்று நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்தில், மத்திய வங்கியின் விகித நிர்ணயக் குழு, பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. பணப்புழக்கத்தை அதிகரிக்க, பண இருப்பு விகிதத்தை (CRR) 50 அடிப்படை புள்ளிகளால் (ஒரு சதவீத புள்ளி 100 அடிப்படை புள்ளிகளுக்கு சமம்) குறைத்தது.சி.ஆர்.ஆர் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்புக்களாக டெபாசிட் செய்ய வேண்டிய நிதிகளின் பங்கைக் குறிக்கிறது, அதாவது வங்கிகள் அதிலிருந்து எந்த வட்டியையும் பெறுவதில்லை.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன