உலகம்
நீர் மாசடைவுக்கு எதிராக போராட்டம்!

நீர் மாசடைவுக்கு எதிராக போராட்டம்!
நீர் மாசடைவை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு லண்டன் மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு மக்கள் எதிர்ப்பிலும் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானியாவிலுள்ள ஆறுகள் மற்றும் கடற்பகுதிகளை சுத்தம் செய்து நீர் மாசடைவை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு தொழிற்சாலைகளின் கழிவுகளினால் நீர் மாசடைவு வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.