Connect with us

இலங்கை

வாகனத்தை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை!

Published

on

Loading

வாகனத்தை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை!

வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாந் மானகே, 4 முதல் 5 வருடங்களாக வாகன இறக்குமதி இன்மையால் எமது துறை வீழ்ந்துள்ளது. தற்போது எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

வாகனங்கள் எப்போது இறக்குமதி செய்யப்படும் என்பது தொடர்பாக அரசாங்கம் உறுதியான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த ஆண்டு பஸ்கள் மற்றும் லொறிகள் இறக்குமதிக்கும், அதன்பின்னர் ஏனைய வாகனங்களை இரண்டாம், மூன்றாம் கட்டமாக இறக்குமதி செய்யவும் முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தவிடயத்தில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றோம். ஏனெனில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  (ப)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன