இலங்கை
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் மோ. சைக்கிள்!

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் மோ. சைக்கிள்!
யாழ்ப்பாணம், வடமராட்சி- பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் அநாதரவாக மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது; இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சத்தம் ஒன்று கேட்டுள்ளதாகவும் திருடன் என அயலில் உள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே அச்சத்துடன் இருந்திருக்கிறார்கள். விடிந்ததும் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது மாதா சுருவத்தோடு மோதிய நிலையில் மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊரவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் உடனடியாக விரைந்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ச)