இலங்கை
முற்றாக எரிந்து நாசமான வீடு!

முற்றாக எரிந்து நாசமான வீடு!
களுத்துறை, வாதுவை பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இவ்விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் எவ்வாறிருப்பினும்இ இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.