Connect with us

இலங்கை

மட்டக்களப்பு மீனவருக்கு நேர்ந்த துயரம்

Published

on

Loading

மட்டக்களப்பு மீனவருக்கு நேர்ந்த துயரம்

   மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் திராய்மடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணு ராஜ் (வயது 34 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

Advertisement

முகத்துவாரம் பகுதியில் இருந்து இயந்திர படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க வியாழக்கிழமை (12) இரவு இருவர் சென்று மீன் பிடித்து விட்டு மீண்டும் இன்று (13) காலை 8 மணியளவில் முகத்துவாரம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் உயிர் பிழைத்த நிலையில் மற்றைய மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன