இலங்கை
வீட்டு மதலுடன் மோதிய கப்ரக வாகனம்!

வீட்டு மதலுடன் மோதிய கப்ரக வாகனம்!
யாழ். மானிப்பாய் சுதுமலையில் கப்ரக வாகனம் ஒன்றும் வான் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுதுமலை அம்மன் கோவிலின் குருக்களது வீட்டு மதிலே சேதமடைந்துள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பு எதுவும் இடம்பெறவில்லை எனவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்தும் வருகின்றனர். (ச)