இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல்: “ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” – முதலமைச்சர் அழைப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல்: “ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” – முதலமைச்சர் அழைப்பு!
மு.க.ஸ்டாலின்
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இந்த வாரம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவை ஆபத்துமிக்க ஒற்றை ஆட்சி முறைக்கு கொண்டு செல்லும் என்றும் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை அழித்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
#INDIA will resist the anti-federal & impractical “One nation one election” as it will push the country into the perils of unitary form of governance, killing its diversity and democracy in the process.
The Union BJP government seeks to push it with an ulterior motive of… pic.twitter.com/PslpjWoRwM
கூட்டாட்சி முறைக்கு எதிரான, நடைமுறையில் சாத்தியமில்லாத இந்த திட்டத்தை ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புக்கு எதிரான இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அரசியல் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறியுள்ள முதலமைச்சர், முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த பாஜக முயற்சி செய்வதாகவும் சாடியுள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.