Connect with us

இலங்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கத்துக்கு வாய்ப்புண்டு!

Published

on

Loading

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கத்துக்கு வாய்ப்புண்டு!

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600கிலோமீற்றர் தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625கிலோமீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 675கிலோமீற்றர் தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 735கொலோமீற்றர் தூரத்திலும் காங்கேசன்துறையில் இருந்து தென்கிழக்காக 835கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது அடுத்துவரும் 24 மணித்தியாலத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்க பகுதியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

பின்னர் இது அடுத்த வரும் இரு நாட்களில் மேற்கு அல்லது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, வட இலங்கைக்கு அண்மையாக வந்து, பின்னர் அது நகரும் திசையை மாற்றி தமிழ்நாட்டின் கரைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இதேவேளை, இன்று காலை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை எதிர்வு கூறலில்,
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளில் அவ்வாபோதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

சில பிரதேசங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன