உலகம்
இருவேறு இடங்களில் துப்பாக்கி சூடு!

இருவேறு இடங்களில் துப்பாக்கி சூடு!
அமெரிக்கா லூசியானா மாகாணத்தின் இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
நியூ ஓர்லென்ஸ் நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு சிறிது நேரத்தில் Almonaster Avenue பகுதியில் மற்றொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிசூட்டுக்கான காரணங்கள் இது வரையில் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.