Connect with us

இலங்கை

யாழ்.வடமராட்சியில் எச்சரிக்கை மீறி மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேர்ந்த கதி!

Published

on

Loading

யாழ்.வடமராட்சியில் எச்சரிக்கை மீறி மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம்  இன்றையதினம் (17-12-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 19ம் திகதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையை மீறி மீன்பிடிக்க சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, படகில் பயணித்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன் ஒரு தொகுதி மீன்பிடி வலைகள் கடலுடன் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற அப்பகுதி மீனவர்கள் குறித்த இரண்டு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான படகையும் கரைக்கு கொண்டுவந்தனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன