இலங்கை
நெற்பயிர்களை தாக்கும் யானைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்பு!

நெற்பயிர்களை தாக்கும் யானைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்பு!
கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற்பயிர்களை இரவு வேலைகளில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக அழித்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் இக் காலப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறித்த பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இரவு பகலாக நித்திரை இன்றி காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் நெற்செய்கையில் பெரும்நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது பகுதிக்கு வருகைதந்து எமது நிலைகளை நேரடியாக பார்வையிட்டு எமக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறும் குறித்த விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். (ப)