உலகம்
ஈரானை தாக்கியுள்ள மணல் புயல்!

ஈரானை தாக்கியுள்ள மணல் புயல்!
ஈரானை தாக்கியுள்ள மணல் புயல் காரணமாக பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் புயல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதைகளில் தெளிவின்மையால் வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அரச அலுவலகங்கள் உட்பட பொது நிலையங்களை மூடுவதற்கும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சில நகரங்களின் வளியின் தரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. சுவாச பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.